Thursday, January 28, 2010

மத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்:

மத்திய அரசில் சிறுபாண்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது. மேலும் சில அரசு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காவும் பல்வேறு நலதிட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன.

இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்

இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள இணையதளம்:

www.educationsupport.nic.in

அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள் மருத்துவம் பொருளாதாரம் புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர்.

கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

Ministry Of Minority Affairs (GOVERNMENT OF INDIA) 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003 Contact: Shri Virendra Singh (Deputy Secretary) Tel: 011-24364279 (Office) 011-25368963 (Residence) Fax: 011-24364285

Departmental Appellate Authority, 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003 Tel:011-24364271 (Office) 011-23383576 (Residence) Fax: 011-24364285 Contact: Shri Sujit Datta (Joint Secretary)

NationalCommissionforMinorities,
5th Floor, Lok Nayak Bhavan, Khan Market, New Delhi-110 003 Tel:011-24618349 Fax: 011-24693302, 24642645, 24698410 Email:ncm-mma@nic.in http://www.ncm.nic.in/

National Minorities Development and Financial Corporation, Taimoor Nagar, New Friends Colony, Nehru Nagar, Delhi –110065 (Near S.R.R.I. Staff Quarters) Phone: 011-26326051

Monday, January 25, 2010

தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்!

தமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும் நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு நலதிட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப்படு கின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அனுகவும்.

Directorate of Minorities Welfare (சிறுபான்மை நல இயக்கம்) 807, Anna Salai, Chennai-2 contact:: PH: 044-28511124 / 28551442 / 26161464

Tamil Nadu Minorities Economic Development Corporation Ltd., (தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதார வளர்ச்சி கழகம்) 807, 5th Floor, Anna Salai, Chennai -2 Contact. PH: 044-28514846

MinoritiesCommission (சிறுபாண்மையினர்கமிஷன)
124, Sir Theagaraya Road, Teynampet, Chennai -18 Contact:: PH: 044-24349235

ஒவ்வொறு மாவட்டம் தோறும் சிறுபாண்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

சென்னை 044-25268322

காஞ்சிபுரம் 04112-237424

திருவள்ளூர் 04116-261600

வேலூர் 0416-253012

திருவண்ணாமலை 04175-232306

விழுப்புரம் 04146-2330654

தஞ்சாவூர் 04142-2330121 & 330122

நாகப்பட்டிணம் 04365-253082

திருவாரூர் 04366-2521002

பட்டுக்கோட்டை 04322-221624

திருச்சி 0431-241503134

பெரம்பலூர் 04328-277923

கரூர் 04324-2344508

மதுரை 0452-2532501

தேனி 04546-274960 திண்டுக்கல் 0451-2460080

இராமநாதபுரம் 04567-230056
விருதுநகர் 04562-2352709

சிவகங்கை 04575-240391

திருநெல்வேலி 0462-2501032

தூத்துக்குடி 0461-2340601

கன்னியாகுமரி 04652-2230090

சேலம் 0427-2451172

நாமக்கல் 04286-2581100

தர்மபுரி 04342-2230561

ஈரோடு 0424-2260207

கோயம்புத்தூர் 0422-2301114

நீலகிரி 0423-2444012

மதுரை 0452-2532074

Sunday, January 24, 2010

முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள்:

முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன. தமிழக அளவில் கல்வி உதவி திட்டம் என்ற அளவிற்கு எந்த அமைப்பும் செயல்படுத்தவில்லை. சிறிய அளவில் அவர்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தால் நிதி உதவி பெறலாம். மேலும் பல அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன.

Muslim Educational Institutions And Associations In Tamilnadu (OMEIAT) Anjuman Campus, # 16, B.N. Reddy Road, T. Nagar, Chennai – 17. Email: omeiat@rediffmail.com

B.S. Abdur Rahman Zakaat Fund Foundation, Buhari Building, 4, Moores Road, Chennai-600 006. Ph: 044-42261100 Fax: 044-28231950 Email: admin@bsazakaat.org, www.bsazakaat.org

Baitulmal Tamilnadu, New:100 (Old No: 314), Wallajah Mosque Compound, Triplicane, Chennai – 600 005 Phone : 044-2851 2947 / 2841 1145 EMail:contact@baitulmaltamilnadu.org baitulmaltamilnadu@yahoo.com Web: www.baitulmaltamilnadu.org

Islami Baitulmal. Hajee Abdul Raheem Sahib Street, Fort, Vaniyambadi-635751. Contact : Abdullah Basha Ph: 04174-225481 Email: tahmed.iftikhar@gmail.com www.tahmed.iftikhar@gmail.com

Seethakathi Trust, 688, Anna Salai, Greams Road, Chennai-6. Phone: 044-28522982 web: www.crescentcollege.org

Fathima Educational Trust, 16/298, LIC Colony, Hotal Vasantham Road, New Bus Stand, Salem-636 004. Phone : 0427 – 4041899, 9865978889, 9360684974 Web: www.fathimaedutrust.org

Muslim Education Association, New College Compound, 87, Peters Road, Royapettah, Chennai-600 014 Ph: 044-28267318

Noorul Islam Educational Trust, Kumaracoil, Kanyakumari District- 629 180, Web: info@niceindia.com

Sulaiman Alim Charitable Trust, Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A, Nungambakkam High Road, Chennai-600034 Phone: 044-28115935

The Children Foundation, Post Box No-5007, Chennai – 600090 Email: info@childrenfoundation.net web:www.childrenfoundation.net (Students studying 5th to +2)

All India Caravan-E-Insaaf, 21, R.H. Road, Chennai-14, Mr. Mushtaq Ahmad Mob: 9444052530 web:www.caravan-e-insaaf.com

South Indian Educational Trust
Chennai: No: 10,T.C.Nagar Virugambakkam, Chennai. Mobile: 98403 14436 email:sietchn@southindianedu.org
Coimbatore: No,44, Divine, Ganapathy, Coimbatore
Mobile: 9894619874 email: sietcbe@southindianedu.org

தொகுத்தவர்: மு.சாஜிதுர்ரஹ்மான்

Saturday, January 23, 2010

பல தெய்வ வழிபாடு....

"அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை" என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில்


நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும்

பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தெய்வங்களை கும்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் உலகின் ஒரு கோணத்திலிருந்து மறுகோணம் வரை வாழும் முஸ்லிம்கள் நம்பிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே.

ஆங்கிலத்தில் 'காட்' (God) என்பார்கள். அந்த சொல்லுக்கு 'காட்ஸ்' (Gods) என்ற பன்மைச் சொல் உண்டு.தமிழில் 'இறைவன்', 'தெய்வம்', 'கடவுள்' என்ற சொற்களுக்கு முறையே 'இறைவர்கள்', 'தெய்வங்கள்', 'கடவுளர்' என்ற பன்மைச் சொற்கள் உள்ளன. இப்படி, மற்றைய மொழிகளிலும் இறைவனைக் குறித்துக் காட்டும் பெயரிலேயே பன்மைக்கு 'ஒன்றுக்கு மேல்' என்ற கருத்துக்கு இடமுண்டு. ஆனால் 'அல்லாஹ்' என்ற சொல்லுக்குப் பன்மைச் சொல்லொன்று இல்லை. உண்மையில் 'அல்லாஹ்' என்ற சொல்லே தன்னில் பங்காளி ஒருவரைச் சேர்த்துக் கொள்ளாது தனித்து நிற்கின்றது. இதிலிருந்து இஸ்லாம் கூறும் ஏகத்துவம், 'இறைவன் ஒருவன்' என்ற கருத்து அவனது பெயரிலேயே அமைந்து விட்டதை நீங்கள் அவதானிக்கலாம்.குடும்பம், கல்விக்கூடம், காரியாலயம், அரசு போன்ற பலவற்றின் நிர்வாகம் சீராக இருக்க வேண்டுமாயின் அவற்றின் அதிகாரம் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். மாறாக பலர் அல்ல, சம அதிகாரம் உள்ள இருவர் மட்டும் இருந்தாலே அவற்றின் ஒழுங்கு சீர்குழைந்து விடும்; கட்டுப்பாடு இல்லாது போய்விடும்; நற்பயன்களுக்கு மாறாக தீய பயன்களே கிட்டும்.

இது இப்படியாயின், இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்துக்கும், இதிலுள்ள எண்ணிலடங்காப் படைப்புகளுக்கும், அவற்றைப் பரிபாலித்து, போஷித்து, பாதுகாத்து, ஒழுங்காக இயங்கச் செய்யும் இறைவர்கள் பலர் அல்லது இருவராவது இருக்க முடியுமா? அப்படி இருந்தால் இப்பிரபஞ்சம் சீராக, ஓர் ஒழுங்கின்படி இயங்க முடியுமா? நிச்சயமாக அப்படியில்லை என்றும், இப்பிரபஞ்சத்தை ஒழுங்காக இயக்கும் இறைவன் ஒருவன்தான் என்றும் உங்கள் அறிவு சான்று பகரும் என்பதில் ஐயமில்லை.

இந்த வகையில் இஸ்லாத்தின் இறைக்கருத்து எவ்வளவு இயற்கையாகவும், சிறப்பாகவும் இருக்கின்றது என்பதைப் பார்த்தீர்களா?

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

Saturday, January 16, 2010

முஹம்மது ஸல் அவர்கள் பற்றிய வரலாறு

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.
"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
“ இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ். ”
திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்..


இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

Wednesday, January 13, 2010

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.

இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.

IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம் :

S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவரணி

Govindakudi Mosque

zakat calculator